கோவையில் மது போதையில் போராட்டம்: நேற்று அ.தி.மு.க..! இன்று தி.மு.க..!

கோவை: கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான தி.மு.க.வினர், மது வேண்டி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

கோவை: கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான தி.மு.க.வினர், மது வேண்டி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, தி.மு.க. சார்பில் கோவை கணபதி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பாய், தலையணையுடன் குடியேறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைதாகி அருகில் இருந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, வெளியிலிருந்து மது வாங்கிவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்த வாகனத்தை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால், கொதித்துப் போன தி.மு.க.வினர் போலீசாருடன் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"ஒரு சில மண்டபத்தில் மதுவுடன், பிரியாணி் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?" என்று தி.மு.க-வை சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



"போராட்டங்கள் முடிந்து கைதாவதும், மது குடிப்பதும் சர்வ சாதாரணம்" என அங்குள்ள மற்ற தி.மு.க-வினர் சத்தமிடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 



இறுதியாக, மண்டபத்திற்கு வரும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வாக்குவாதத்தில் ஈடுபடும் தி.மு.க-வினரை சமாதானம் செய்து மதுவை உள்ளே கொண்டு வர அனுமதிப்பதாகக் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் கோவையில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் இடையே அக்கட்சி தொண்டர்கள் மதுபானம் குடிக்க படையெடுத்த நிலையில், இன்று தி.மு.க தொண்டர்கள் மதுபானத்திற்காக சண்டையிடும் காட்சிகள், உணர்வுப்பூர்வமாக போராட்டம் நடத்தியவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...