கோவை - பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை- பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை- பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்களின் சேவை வரும் 8-ம் தேதி முதல் வரும் ஜுன் 11-ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் காலை 8 மணிக்குப் புறப்படுவதாக இருந்த (ரயில் எண் : 56604) சொரனூர் - கோவை பயணிகள் ரயில், 8-ம் தேதி முதல் ஜுன் 11-ம் தேதி வரை காலை 09.30 மணிக்கு கிளம்பும் (வெள்ளிக்கிழமைகளை தவிர்த்து).

இதேபோல, ஏப்., 06, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18 ஆகிய (வெள்ளிக்கிழமை) நாட்களில் சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் (ரயில் எண் : 56604) சொர்னூர் - கோவை பயணிகள் ரயில், 20 நிமிடங்கள் கஞ்சிக்கோட்டில் நிறுத்தப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...