யு.ஜி.சி.யின் டாப் 100 சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் கோவையைச் சேர்ந்த 9 கல்லூரிகளுக்கு இடம்

யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் வெளியிட்டுள்ள தேசிய அளவிலான சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் கோவையைச் சேர்ந்த 9 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் வெளியிட்டுள்ள தேசிய அளவிலான சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் கோவையைச் சேர்ந்த 9 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. 

தேசிய அளவிலான சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலை யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 38 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. கோவையில் ஒன்பது கல்லூரிகள் இடம் பெற்றுள்ளது.

பட்டியலில் இடம் பெற்றுள்ள கோவை கல்லூரிகளின் விவரம் :

1) பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி

2) பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி

3) கோவை அரசு கலை கல்லூரி

4) ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்

5) ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

6) கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி

7) சி.எம்.எஸ் கலை அறிவியல் கல்லூரி

8) டாக்டர். என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி

9) ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி

இதில், கோவை அரசு கலை கல்லூரியானது இந்திய அளவில் 33வது இடத்தையும், தமிழகத்தில் 7-வது இடத்தையும், கோவையில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இது குறித்து கோவை அரசு கலை கல்லூரியின் முதல்வர் நளினி கூறும்போது, "சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் அரசு கல்லூரி இடம்பிடித்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. வேலை வாய்ப்பு, தேர்ச்சி விகிதம், பாடத்திட்டம் உள்ளிட்ட அடிப்படையில் இந்த ரேங்கிங் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 5,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. நவீன  தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்கள் நடத்தப்படுகின்றன. அரசு கலை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களே பயின்று வருகின்றனர். தனியார் கல்லூரிகளை விட சிறப்பான முறையில் கோவை அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது," இவ்வாறு கூறினார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...