பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்கள் மூட தீர்மானம்

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து தொலைதூர கல்விமையங்களும் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து தொலைதூர கல்விமையங்களும் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த சில தினங்களாகவே சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக காணப்படுகிறது. போராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறி பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின் மார்ச் மாதம் ஜாமினில் வெளிவந்தார். 

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிண்டிகேட் என்கிற பல்கலைக்கழக ஆட்சிக் குழு மாற்றியமைக்கப்பட்டது. இதனிடையே அக்குழுவின் கூட்டம் தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் மார்ச் 26-ம் தேதி நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பல்கலைக்கழக நலன் கருதி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தொலைதூரக் கல்வி மையங்கள் மூட இருப்பதும், வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து தமிழ்நாடு சுயநிதியல் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தை சேர்ந்த மூத்த நீர்வாகி ஒருவர் கூறுகையில், "தொலைதூர கல்வி மையங்கள் என்ற பேரில் தனியார் இன்ஸ்டிட்யூட்கள் பல முறைகேடுகளில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு வகுப்பறையில்லாமலும், சரியான எந்த லேப் வசதிகளும் இல்லாமலும், ஆசிரியர்களும் இல்லாமலும் பெயரளவில் இயங்கி வந்தன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து எங்கள் சங்கம் மூலம் பல முறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. தற்போது இந்த தீர்மானத்தின் மூலம் இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. இதை தனியார் கல்லூரியின் ஒர் முதல்வராக மாணவர்களின் நலன் கருதி வரவேற்கிறேன். இந்த தீர்மானத்தின் மூலம் மாணவர்களின் கல்வி தரம் உயரும். மாணவர்கள் சரியான சூழ்நிலையில் எல்ல வசதிகளுடன் படித்து வெளியில் வரும் அவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்." என்றார்.

இது குறித்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மார்ச் மாதம் 30-ம் தேதி தமிழ்நாடு சுயநிதியல் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...