கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், தி.மு.க மற்றும் இதர கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கோவையைப் பொறுத்தவரையில், பல்வேறு கடைகள் மற்றும் மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. காந்திபுரம் பகுதியில் அமைச்சர் வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் இன்று காலை கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் பங்கேற்றது.
இந்த போராட்டத்தின் போது போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.