திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், தமிழக பெரு நிறுவனங்கள், தொழில் வளாக உரிமையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பேரமைப்போடு இணைந்த ஒருங்கிணைப்பு குழு விடுத்துள்ள வேண்டுகோளில், 3-4-2018 அன்று (நாளை) ஒரு நாள் கடையடைப்புக்கு ஓரணியில் திரண்டு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்கனவே, விவசாயமும் அழிந்து வணிகர்களின் வாழ்வாதாரமும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் சிதைந்து போயுள்ள நிலையில், ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக அறிவிக்கும் போராட்டங்களுக்கும், பேரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்ந்த அமைப்புகள் தார்மீக ஆதரவு அளித்தாலும், ஒவ்வொரு முறையும் கடையடைப்பு என்பது சாத்தியமில்லை என்பதனால், அனைத்து அரசியல் அமைப்புகளும், தமிழக பெருநிறுவனங்கள் தொழில்வளாக உரிமையாளர்கள் தங்களின் ஒருமித்த ஆதரவை பேரமைப்பு அறிவித்துள்ள 3-4-2018 அன்று (நாளை) நடைபெறும் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு அளித்து கடையடைப்பு மாபெரும் வெற்றியடைய உதவிடுமாறு இருகரம் கூப்பி வேண்டுவதாக அறிவித்தார்.
இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நலன்கருதி மட்டுமே அன்றி எந்த தனிப்பட்ட லாப நோக்கத்திற்காகவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், தமிழக பெரு நிறுவனங்கள், தொழில் வளாக உரிமையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பேரமைப்போடு இணைந்த ஒருங்கிணைப்பு குழு விடுத்துள்ள வேண்டுகோளில், 3-4-2018 அன்று (நாளை) ஒரு நாள் கடையடைப்புக்கு ஓரணியில் திரண்டு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்கனவே, விவசாயமும் அழிந்து வணிகர்களின் வாழ்வாதாரமும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் சிதைந்து போயுள்ள நிலையில், ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக அறிவிக்கும் போராட்டங்களுக்கும், பேரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்ந்த அமைப்புகள் தார்மீக ஆதரவு அளித்தாலும், ஒவ்வொரு முறையும் கடையடைப்பு என்பது சாத்தியமில்லை என்பதனால், அனைத்து அரசியல் அமைப்புகளும், தமிழக பெருநிறுவனங்கள் தொழில்வளாக உரிமையாளர்கள் தங்களின் ஒருமித்த ஆதரவை பேரமைப்பு அறிவித்துள்ள 3-4-2018 அன்று (நாளை) நடைபெறும் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு அளித்து கடையடைப்பு மாபெரும் வெற்றியடைய உதவிடுமாறு இருகரம் கூப்பி வேண்டுவதாக அறிவித்தார்.
இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நலன்கருதி மட்டுமே அன்றி எந்த தனிப்பட்ட லாப நோக்கத்திற்காகவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.