இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த மார்ச் 20-ம் தேதி பத்ம விருதுகளை வழங்கினார். இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் 2-வது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில், கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷண், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த மார்ச் 20-ம் தேதி பத்ம விருதுகளை வழங்கினார். இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் 2-வது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில், கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷண், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.