காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை டெல்லி செல்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை டெல்லி செல்கிறார்.
உச்சநீதிமன்றம் விடுத்த கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால், தமிழகத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசி வருகிறது. மேலும், நாளை முதல் பல்வேறு கட்டப் போராட்டங்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடத்த உள்ளன. இதனிடையே, நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று இரவு 7.10 மணி விமானத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவார் எனத் தெரிகிறது.
உச்சநீதிமன்றம் விடுத்த கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால், தமிழகத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசி வருகிறது. மேலும், நாளை முதல் பல்வேறு கட்டப் போராட்டங்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடத்த உள்ளன. இதனிடையே, நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று இரவு 7.10 மணி விமானத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவார் எனத் தெரிகிறது.