காவிரி விவகாரத்தில் தீவிரமடையும் போராட்டம் : ஆளுநர் இன்று திடீர் டெல்லி பயணம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை டெல்லி செல்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை டெல்லி செல்கிறார். 

உச்சநீதிமன்றம் விடுத்த கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால், தமிழகத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசி வருகிறது. மேலும், நாளை முதல் பல்வேறு கட்டப் போராட்டங்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடத்த உள்ளன. இதனிடையே, நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று இரவு 7.10 மணி விமானத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...