கேரள பந்த் காரணமாக உக்கடத்தில் பேருந்துகள் நிறுத்தம் : பயணிகள் தவிப்பு

கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 



நிரந்தரத் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பாஜ.க, தொழிற்சங்கம் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும், 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி, கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.



முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி கேரளாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக, குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. 



இதேபோல, கோவையிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு, வேலந்தாவளம், அட்டபாடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சொடி காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



மேலும், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் கோவை மாவட்டம் மற்றும் கேரள எல்லையான வாழையார் சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில் போக்கவரத்து நெரிசலாகக் காணப்பட்டது. 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...