கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நிரந்தரத் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பாஜ.க, தொழிற்சங்கம் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும், 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி, கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி கேரளாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக, குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதேபோல, கோவையிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு, வேலந்தாவளம், அட்டபாடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சொடி காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் கோவை மாவட்டம் மற்றும் கேரள எல்லையான வாழையார் சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில் போக்கவரத்து நெரிசலாகக் காணப்பட்டது.


நிரந்தரத் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பாஜ.க, தொழிற்சங்கம் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும், 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி, கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி கேரளாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக, குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதேபோல, கோவையிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு, வேலந்தாவளம், அட்டபாடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சொடி காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் கோவை மாவட்டம் மற்றும் கேரள எல்லையான வாழையார் சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில் போக்கவரத்து நெரிசலாகக் காணப்பட்டது.
