திருப்பூர்: விசைத்தறி தொழிலுக்கு வாங்கிய வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: விசைத்தறி தொழிலுக்கு வாங்கிய வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காரணம்பேட்டை, அவினாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கும் கூலி விசைத்தறிகளை நஷ்டத்தை அடைய செய்துள்ளதாகவும், கூலி உயர்வை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் விசைத்தறியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளும் விசைத்தறி தொழிலை நலிந்து போக செய்ததாக விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் வங்கியில் பெற்ற கடனை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காரணம்பேட்டை, அவினாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கும் கூலி விசைத்தறிகளை நஷ்டத்தை அடைய செய்துள்ளதாகவும், கூலி உயர்வை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் விசைத்தறியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளும் விசைத்தறி தொழிலை நலிந்து போக செய்ததாக விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் வங்கியில் பெற்ற கடனை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.