டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மன வேதனை அளிப்பதாகக் கூறி அ.தி.மு.க.-வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் அவரது பதவியை ராஜினாமா செய்வதாக துணை குடியரசுத் தலைவரிடம் அளித்த கடிதம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மன வேதனை அளிப்பதாகக் கூறி அ.தி.மு.க.-வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் அவரது பதவியை ராஜினாமா செய்வதாக துணை குடியரசுத் தலைவரிடம் அளித்த கடிதம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் கடந்த 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.
இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.,யான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 30-ம் தேதி டெல்லியில் அறிவித்தார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.
இந்த சூழலில், முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதம் அதற்கான முறையான வடிவத்தில் இல்லை என்றும், இதனால் அவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு ஏற்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.