டெல்லி: காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார்.
காவரி விவகாரத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு அப்போது உத்தரவிட்டது.
நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு கூறி இருந்ததால், உச்ச நீதிமன்றத்து உத்தரவின்படி அந்த இரு அமைப்புகளையும் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தன.
ஆனால் கர்நாடக அரசோ, ‘ஸ்கீம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடவில்லை என்று கூறி வருகிறது.
இந்த நிலையில், "காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை. மேலும், ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது. தமிழகத்திற்கு இது பெரிய பிரச்சினை தான். தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் ஏப்ரல் 9-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்." என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
காவரி விவகாரத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு அப்போது உத்தரவிட்டது.
நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு கூறி இருந்ததால், உச்ச நீதிமன்றத்து உத்தரவின்படி அந்த இரு அமைப்புகளையும் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தன.
ஆனால் கர்நாடக அரசோ, ‘ஸ்கீம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடவில்லை என்று கூறி வருகிறது.
இந்த நிலையில், "காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை. மேலும், ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது. தமிழகத்திற்கு இது பெரிய பிரச்சினை தான். தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் ஏப்ரல் 9-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்." என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.