வால்பாறை பகுதியில் மழை : அருவிகளில் நீரை கண்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

வால்பாறை : வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறை : வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



கோடை சீசன் தொடங்கிவிட்ட காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலாப் செல்லத் தொடங்கியுள்ளனர். நிலவிவரும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைத்தார் போல, சுற்றுலாப் பயணிகள் மலைப் பிரதேசங்களுக்கு சென்று இளைப்பாறி வருகின்றனர். 

அதோடு, கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் வால்பாறை மற்றும் உதகை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. குழு-குழுவென இருந்த வால்பாறையில் நேற்று லேசான மழை பெய்தது. கோடையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பெய்த இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். 



தொடர்ந்து, இன்றும் அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் ஆங்காங்கே உள்ள சிறு அருவிகளில், நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளது. இது அங்கு சுற்றுலாப் சென்ற பயணிகளை குதூகலமடையச் செய்துள்ளது. தற்போது அந்த அருவிகளில் வழிந்தோடும் நீரில் விளையாடி இன்பச் சுற்றுலாவாக கொண்டாடி வருகின்றனர் சுற்றுலாப் பயணிகள். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...