கோவையில் 8-வது ரவுண்ட் டேபிளாக இணைக்கப்பட்டது 'ஸ்பார்க்'

கோவை: இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலனுக்காக செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் இந்தியாவில், 'ஸ்பார்க்' என்ற பெயரில் மேலும் ஒரு ரவுண்ட் டேபிள் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை: இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலனுக்காக செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் இந்தியாவில், 'ஸ்பார்க்' என்ற பெயரில் மேலும் ஒரு ரவுண்ட் டேபிள் உருவாக்கப்பட்டுள்ளது.

இலாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் அமைப்பில் ஏற்கனவே 7 டேபிள்கள் (அமைப்புகள்) உள்ளன. இவை ஒருங்கிணைந்து இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலன்களுக்காகப் பாடுபட்டு வருகின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுடன் இணைந்து பின்தங்கிய மாணவர்களுக்கான உதவிகள், பள்ளிகளுக்கு இலவச கழிப்பறைகள் மற்றும் இயற்கை சீற்ற மீட்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலன்களில் அக்கறை காட்டி வருகின்றன.



இந்த நிலையில், பாலக்காட்டைச் சேர்ந்த 'ரவுண்ட் டேபிள் 81' சார்பில் ஸ்பார்க் என்ற அமைப்பு, கோவையில் உள்ள ரவுண்ட் டேபிள் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது, கோவையில் சேர்க்கப்பட்ட 8-வது ரவுண்ட் டேபிள் ஆகும். இதன் தொடக்க நிகழ்ச்சியில், ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசிய உறுப்பினர்கள் மற்றும் திரைப்பட நடிகர் நரேன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஸ்பார்க்கின் தலைவராக பன்கஜ் கபூரும், செயலாளராக சுஜய் நிலையம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



8-வது ரவுண்ட் டேபிளாக இணைக்கப்பட்டது 'ஸ்பார்க்', சிறுதுளி அமைப்புடன் இணைந்து மரம் நடுதல், குளங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றையில் ஈடுபட உள்ளது. முதற்கட்டமாக, மரம் நடுவதற்கு மட்டும் ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்தங்கியவர்கள், ஆதரவற்றோர், தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றிற்கு ரூ. 4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சிகிச்சைக்காக ரூ. 35,000 ஆற்றல் அறக்கட்டளைக்கு ஸ்பார்க் நன்கொடையாக வழங்கியது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...