காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கும், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கும், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள 6 வார காலம் வரை காத்திருந்து, பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், 17 நாட்கள் நாடாளுமன்றத்தை அ.தி.மு.க., எம்.பி.,க்கள் முடக்கினர். இருப்பினும், காவிரி வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படவில்லை. இதனையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், திட்டம் என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவானது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுக்கு முரணானது. இந்த மனு விசாரணைக்கு வரும்போது, ஆரம்ப நிலையிலேயே மனு நிராகரிக்கும் வகையில் வாதாடுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் நமது உரிமைகளை நிலைநாட்டவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள 6 வார காலம் வரை காத்திருந்து, பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், 17 நாட்கள் நாடாளுமன்றத்தை அ.தி.மு.க., எம்.பி.,க்கள் முடக்கினர். இருப்பினும், காவிரி வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படவில்லை. இதனையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், திட்டம் என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவானது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுக்கு முரணானது. இந்த மனு விசாரணைக்கு வரும்போது, ஆரம்ப நிலையிலேயே மனு நிராகரிக்கும் வகையில் வாதாடுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் நமது உரிமைகளை நிலைநாட்டவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.