கோவை: தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் உடல்உறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் செயல்களை பாராட்டி மருத்துவமனையின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்," இந்திய அளவில் உடல் உறுப்புகளை தானம் செய்வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. உறுப்பு மாற்று நிகழ்வுக்காக தமிழகம் 3 முறை மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது. ஏனெனில், சுகாதாரம் தொடர்பாக முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகள், மருத்துவத்துறையை வளர்ச்சியடையச் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதற்கு, பிரதமர் மோடியின் கூட்டு நடவடிக்கையும் காரணம். மேலும், தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுகின்றன", என்றார்.


மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் உடல்உறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் செயல்களை பாராட்டி மருத்துவமனையின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்," இந்திய அளவில் உடல் உறுப்புகளை தானம் செய்வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. உறுப்பு மாற்று நிகழ்வுக்காக தமிழகம் 3 முறை மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது. ஏனெனில், சுகாதாரம் தொடர்பாக முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகள், மருத்துவத்துறையை வளர்ச்சியடையச் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதற்கு, பிரதமர் மோடியின் கூட்டு நடவடிக்கையும் காரணம். மேலும், தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுகின்றன", என்றார்.
