நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், வைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர் திடீரென தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

விசாரணையில் அவர் பெயர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது தெரியவந்தது. தொண்டரின் இந்த செயலுக்கு வைகோ வருத்தமும். வேதனையும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வைகோ மேடையில் பேசியதாவது:- இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என பல முறை கூறியிருக்கிறேன். தீக்காயமுற்ற இந்த தம்பியின் உடல் முழுவதும் எரிந்திருக்கிறது. இயற்கை அன்னை எப்படியாவது இந்தத் தொண்டரை காப்பாற்றித்தர வேண்டும். ரவியை நம்பி அவரது குடும்பம் உள்ளது. வேதனையோடு எனது கடமையை நடைபயணத்தை துவக்குகிறேன். இவ்வாறு அவர் பேசும் போது நா தழு, தழுக்க கண்ணீர் விட்டார் வைகோ.
இந்த உரைக்குப் பின்னர், வைகோ தனது நடைபயணத்தை தொடங்கினார். வைகோ மதுரையில் இருந்து கம்பம் வரை இந்த நடைபயணத்தை நடத்துகிறார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் செல்கின்றனர். 10 நாட்களுக்கு நடைபயணம் நடக்கிறது.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், வைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர் திடீரென தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

விசாரணையில் அவர் பெயர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது தெரியவந்தது. தொண்டரின் இந்த செயலுக்கு வைகோ வருத்தமும். வேதனையும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வைகோ மேடையில் பேசியதாவது:- இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என பல முறை கூறியிருக்கிறேன். தீக்காயமுற்ற இந்த தம்பியின் உடல் முழுவதும் எரிந்திருக்கிறது. இயற்கை அன்னை எப்படியாவது இந்தத் தொண்டரை காப்பாற்றித்தர வேண்டும். ரவியை நம்பி அவரது குடும்பம் உள்ளது. வேதனையோடு எனது கடமையை நடைபயணத்தை துவக்குகிறேன். இவ்வாறு அவர் பேசும் போது நா தழு, தழுக்க கண்ணீர் விட்டார் வைகோ.
இந்த உரைக்குப் பின்னர், வைகோ தனது நடைபயணத்தை தொடங்கினார். வைகோ மதுரையில் இருந்து கம்பம் வரை இந்த நடைபயணத்தை நடத்துகிறார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் செல்கின்றனர். 10 நாட்களுக்கு நடைபயணம் நடக்கிறது.