கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்திருந்த சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மீண்டும் திரும்பினார்.
கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்திருந்த சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மீண்டும் திரும்பினார்.
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராஜன் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் உடல்நல குறைவால் காலமானார். இதையடுத்து, கணவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா பரோல் கோரினார். அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவர் சிறையில் இருந்து கடந்த 20-ந்தேதி தஞ்சாவூருக்கு புறப்பட்டார். அங்கு கணவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சசிகலா பரோலில் வந்து 10 நாட்கள் ஆன நிலையில், இன்று தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு கார் மூலமாக புறப்பட்டுச் சென்றார். சசிகலாவுடன் தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு வரை டி.டி.வி. தினகரனும் உடன் சென்றார். சுமார் 4 மணியளவில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரும்பினார்.
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராஜன் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் உடல்நல குறைவால் காலமானார். இதையடுத்து, கணவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா பரோல் கோரினார். அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவர் சிறையில் இருந்து கடந்த 20-ந்தேதி தஞ்சாவூருக்கு புறப்பட்டார். அங்கு கணவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சசிகலா பரோலில் வந்து 10 நாட்கள் ஆன நிலையில், இன்று தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு கார் மூலமாக புறப்பட்டுச் சென்றார். சசிகலாவுடன் தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு வரை டி.டி.வி. தினகரனும் உடன் சென்றார். சுமார் 4 மணியளவில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரும்பினார்.