கோவை: கோவை மாவட்டம் சாடிவாயல் யானைகள் முகாமில் பயிற்சி பெற்று வந்த இரு கும்கி யானைகள் அதன் இருப்பிடத்திற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் சாடிவாயல் யானைகள் முகாமில் பயிற்சி பெற்று வந்த இரு கும்கி யானைகள் அதன் இருப்பிடத்திற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பாரி (37), சுஜய் (45) ஆகிய யானைகள் கும்கிளாக தங்களது சேவையைச் செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, இரு யானைகளும் ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, கோவை மாவட்டம் சாடிவயலில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் பாரி மற்றும் சுஜய் உள்ளிட்ட பல்வேறு யானைகள் கலந்து கொண்டன. 48 நாட்கள் பயிற்சி முகாம் கடந்த புதன்கிழமையே முடிவடைந்தது. இதில், கலந்து கொண்ட யானைகள், அவற்றின் இருப்பிடத்திற்கு திரும்பிய நிலையில், நேற்று கும்கி யானை பாரி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது, பாரிக்கு மதநீர் திடீரென சுரந்தது. இதனால், அந்த யானை காப்பகத்திலேயே தங்க வைக்கப்பட்டது. மேலும், கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகே, அதன் காப்பகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றொரு கும்கி யானையான சுஜய் இன்று தேக்கம்பபட்டி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே, சாடிவயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு கும்கி யானைகளுக்கு பதிலாக முதுமலையில் இருந்து சேரன் மற்றும் ஜான் ஆகிய கும்கி யானைகள் பதிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பாரி (37), சுஜய் (45) ஆகிய யானைகள் கும்கிளாக தங்களது சேவையைச் செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, இரு யானைகளும் ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, கோவை மாவட்டம் சாடிவயலில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் பாரி மற்றும் சுஜய் உள்ளிட்ட பல்வேறு யானைகள் கலந்து கொண்டன. 48 நாட்கள் பயிற்சி முகாம் கடந்த புதன்கிழமையே முடிவடைந்தது. இதில், கலந்து கொண்ட யானைகள், அவற்றின் இருப்பிடத்திற்கு திரும்பிய நிலையில், நேற்று கும்கி யானை பாரி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது, பாரிக்கு மதநீர் திடீரென சுரந்தது. இதனால், அந்த யானை காப்பகத்திலேயே தங்க வைக்கப்பட்டது. மேலும், கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகே, அதன் காப்பகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றொரு கும்கி யானையான சுஜய் இன்று தேக்கம்பபட்டி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே, சாடிவயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு கும்கி யானைகளுக்கு பதிலாக முதுமலையில் இருந்து சேரன் மற்றும் ஜான் ஆகிய கும்கி யானைகள் பதிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.