மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலை கட்டி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக சேலை கட்டி மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சென்னை முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் பேசுகையில், "தமிழக அரசு மத்திய அரசின் அடிமைபோல் செயல்படுவதால் அனைத்து உரிமைகளையும் இழந்து நிற்கிறது. மக்களுக்காக செயல்படாமல் , பதவிக்காக செயல்படும் மத்திய, மாநில பேடி அரசுகளை கண்டித்து சென்னை முழுவதும் சேலை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதவர்கள் சேலைதான் கட்ட வேண்டும் என்பதை இந்த போராட்டத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறோம்," என்றார்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...