திருப்பூர்: திருப்பூர் எம்.பி. சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி : கணவர் கைது
திருப்பூர்: திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவரது கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா (45) வசித்து வருகிறார். திருப்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யான இவருக்கும், கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சத்யபாமாவை, அவரது கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சத்யபாமாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சத்யபாமாவின் கணவர் வாசு மீது கொலை முயற்சி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சத்யபாமாவுக்கும், வாசுவுக்கும் 1990ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வாசு, சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா (45) வசித்து வருகிறார். திருப்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யான இவருக்கும், கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சத்யபாமாவை, அவரது கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சத்யபாமாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சத்யபாமாவின் கணவர் வாசு மீது கொலை முயற்சி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சத்யபாமாவுக்கும், வாசுவுக்கும் 1990ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வாசு, சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.