இந்திய அணிக்கு தேர்வாகும் வகையில் தமிழகத்தில் சிறந்த பயிற்சி முகாம்கள் : தமிழக கிரிக்கெட் வீரர் சதீஷ்

கோவை : தமிழகத்திலிருந்து மேலும் பல வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் வகையில், பயிற்சி முகாம்கள் திறம்பட செயல்படுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை : தமிழகத்திலிருந்து மேலும் பல வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் வகையில், பயிற்சி முகாம்கள் திறம்பட செயல்படுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் கோவையில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் தமிழக வீரர்களின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கிரிக்கெட்டில் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக, சர்வதேச அளவிலான கிரிக்கெட் பயிற்சி முகாம் கோவையில் தொடங்கப்பட்டது. இதற்கான விழா கோவைப்புதூரில் உள்ள தனியார் அகாடமி மையத்தில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். 

இவ்விழாவில், தமிழக கிரிக்கெட் அணியின் வீரர்கள் அருண் கார்த்திக் மற்றும் ராஜகோபால் சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர்கள், தற்போது இந்திய பெண்கள் அணி கிரிக்கெட் வீராங்கனைகளும், உலக அளவில் சாதித்து வருகின்றனர். மாணவியரும் அதிக அளவில் கிரிக்கெட் பயிற்சி முகாமில் ஈடுபட்டு, தங்கள் விளையாட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக் கேட்டுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் சதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் திறம்பட செயல்படுகின்றன. இதனால், இந்திய கிரிக்கெட் அணிக்காக மேலும் பல தமிழக வீரர்கள் விளையாட வாய்ப்புள்ளது," என்றார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...