தடையை மீறி விற்கப்பட்ட இறைச்சியை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூரில் மகாவீர் ஜெயந்தியன்று, தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் மகாவீர் ஜெயந்தியன்று, தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். 



மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் இயங்கக் கூடாது என்பது அரசு விதி. விதியை மீறி செயல்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இன்று திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம் பகுதியில் செயல்பட்ட இறைச்சி கடைகளின் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி சுகாதார துறையினர் பறிமுதல் செய்தனர். 

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு மாநகராட்சி வாகனத்தை ஒட்டுநர் ரமேஷ் ஒட்டி வந்தார். திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் அருகே வந்த போது, இறைச்சி கடையைச் சேர்ந்த சித்திக் என்பவர் மாநகராட்சி ஊழியர்களிடம் பொருட்களை எடுத்து வந்ததை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள், தங்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக சித்திக் மீது திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...