பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு: போலீசார் குவிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி விவகாரத்தில் தீர்வு காண குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விடுத்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு ஒருபுறம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மறுபுறம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள், அதாவது இன்று 3 மணிக்குள் அமைக்காவிட்டால் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை கைது செய்யவும் தயார் நிலையில் உள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...