காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில் "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? என்ற விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில் "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? என்ற விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த மாதம் 16-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், "ஸ்கீம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. "ஸ்கீம்" என்ற வார்த்தை மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்றும், அது கண்காணிப்பு குழுவைத் தான் குறிக்கிறது என்றும், கர்நாடக அரசு வாதாடி வருகிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை எனவும் கர்நாடக அரசு கூறி வருகிறது.
ஆனால், இந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை தான் குறிக்கிறது எனவும், எனவே அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. "ஸ்கீம்" என்ற வார்த்தை தொடர்பாக இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்து நிலவுவதால், இது தொடர்பாக, அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
அப்போது, ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யலாமா? என்று விவாதிக்கப்பட்டது. பின்னர் விளக்க மனு தாக்கல் செய்ய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விரைவில் விளக்க மனு தாக்கல் செய்கிறது.