'ஸ்கீம்' என்ற வார்த்தையால் முடங்கிக் கிடக்கும் காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில் "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? என்ற விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.


காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில் "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? என்ற விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த மாதம் 16-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், "ஸ்கீம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. "ஸ்கீம்" என்ற வார்த்தை மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்றும், அது கண்காணிப்பு குழுவைத் தான் குறிக்கிறது என்றும், கர்நாடக அரசு வாதாடி வருகிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை எனவும் கர்நாடக அரசு கூறி வருகிறது.

ஆனால், இந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை தான் குறிக்கிறது எனவும், எனவே அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. "ஸ்கீம்" என்ற வார்த்தை தொடர்பாக இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்து நிலவுவதால், இது தொடர்பாக, அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

அப்போது, ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யலாமா? என்று விவாதிக்கப்பட்டது. பின்னர் விளக்க மனு தாக்கல் செய்ய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விரைவில் விளக்க மனு தாக்கல் செய்கிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...