முதுமலை புலிகள் காப்பக யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது.



முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது. அன்று முதல் முகாமில் உள்ள 23 யானைகளுக்கு இக்காலகட்டத்தில் சிறப்பு சிகிச்சைகள், சத்துள்ள உணவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. 

இந்நாட்களில் யானைகளை வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தாமலும், சவாரிக்கு பயன்படுத்தாமலும் வைத்திருந்தனர். இன்றுடன் 48 நாட்கள் முகாம் நிறைவு பெற்ற நிலையில், யானைகளுக்கு பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றது. பின்னர் சுவையான பழங்கள், கரும்பு ஆகியவற்றுடன் உணவு வழங்கப்பட்டு முகாம் நிறைவு பெற்றது. இந்நிலையில், நாளை முதல் வழக்கம்போல, சுற்றுலாப் பயணிகளுக்காக யானைச் சவாரி தொடங்கப்படவுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...