திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி ஒன்றியத்திற்குட்பட்ட எண்: 414 விருமாண்டம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான 11 இயக்குநர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், தி.மு.க.,வினர் 4 பேரும், காங்கிரசில் 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு இருபது பேர் இறுதி செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிடாமலும், தேர்தல் அதிகாரி வராமல் காலம் தாழ்த்தி அ.தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி வங்கி வளாகத்திலேயே சமையல் செய்து தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி ஒன்றியத்திற்குட்பட்ட எண்: 414 விருமாண்டம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான 11 இயக்குநர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், தி.மு.க.,வினர் 4 பேரும், காங்கிரசில் 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு இருபது பேர் இறுதி செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிடாமலும், தேர்தல் அதிகாரி வராமல் காலம் தாழ்த்தி அ.தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி வங்கி வளாகத்திலேயே சமையல் செய்து தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.