கோவை: கோவை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான சதாப்தி விரைவு ரயிலில் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த அனுபூதி ரயில் பெட்டி இணைப்பு மேலும் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான சதாப்தி விரைவு ரயிலில் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த அனுபூதி ரயில் பெட்டி இணைப்பு மேலும் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை முதல் சென்னை சென்ட்ரல், சதாப்தி விரைவு ரயிலில் இன்று வரை தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த அதிநவீன அனுபூதி ரயில் பெட்டி இணைப்பு மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது 30.06.2018 வரை தற்காலிக அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.