சம்பிரதாயமாக நடத்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் வெளியீட்டு விழா

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த புத்தகத்தை வெளியிடாமல், புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர்.

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த புத்தகத்தை வெளியிடாமல், புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர். 



திருப்பூர் மாநகராட்சியின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆணையர் அசோகனிடம், உதவி ஆணையரிடம் சந்தானநாராயணன் பட்ஜெட் புத்தகத்தை வழங்கினார். இதில், மூலதன வரவுகள் ரூ. 1,171 கோடி என்றும், வருவாய் மற்றும் மூலதன செலவுகள் ரூ. 1,165.67 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில் ரு. 5.87 கோடி உபரி நிதி உள்ளதாக ஆணையர் அசோகன் தெரிவித்தார். 

பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சி இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரென 11.15 மணிக்கு அழைத்து 11.20 மணிக்கு பட்ஜெட் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதனால், முழு சேகரிக்க முடியாமல் செய்தியாளர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் குறித்து நிதிநிலை அறிக்கை விளக்க புத்தகமானது முழு விவரமாக வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட் முழு விவர புத்தகத்தை யாருக்கும் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மறைத்து எடுத்து சென்று விட்டனர். அதில், உள்ள பாதகமான விஷயங்கள் வெளிவராமல் இருப்பதற்காக பட்ஜெட் புத்தகம் மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 



நடப்பாண்டில் திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் வீட்டு வரி, உள்ளிட்ட வரியினங்கள் 400 முதல் 500 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், அதுகுறித்த விரிவான விவர அறிக்கையை தராமல் மாநகராட்சி ரகசிய பட்ஜெட்டை நூதனமாக அறிவித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சியில் தனி அதிகாரிகள் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதால் கேட்பதற்கு ஆள் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...