கோவையில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம்

போக்குவரத்து விதிமீறலால் நடக்கும் விளைவுகள் குறித்து கோவையில் இன்று காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

கோவை: போக்குவரத்து விதிமீறலால் நடக்கும் விளைவுகள் குறித்து கோவையில் இன்று காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.



ஆண்டுதோறும் தமிழகத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகமாகிவருகிறது. இதனால் தமிழகத்தில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் தேவை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் தங்களால் இயன்ற விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே சேர்த்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் அமைப்பு காவல்துறையுடன் இணைந்து சைகை மொழியில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். அவினாசி சாலை, உப்பிலிபாளையம் சிக்னல் முன்பு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நாடகத்தில் முகமூடி வரைந்திருந்த மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நாடகத்தின் நிகழ்வு இரண்டாம் கட்டமாக ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகிலும், மூன்றாவது கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையிலும், நான்காவது கட்டமாக விமான நிலைய சிக்னலிலும் நடைபெறுகிறது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் , போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இது குறித்து பெரியய்யா கூறுகையில், "காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் அதிக ஆர்வத்துடன் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை அருமையாக நாடகமாக நடித்துக் காட்டினர். இது நிச்சயமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்பிக்கை உள்ளது." என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...