வரும் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் டெல்லியில் வழக்கறிஞர்கள் சேகர்நாப்தே-வை சந்தித்து கலந்தாலோசித்தனர். தொடர்ந்து வரும் 31-ம் தேதி (சனிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சேகர்நாப்தே தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் டெல்லியில் வழக்கறிஞர்கள் சேகர்நாப்தே-வை சந்தித்து கலந்தாலோசித்தனர். தொடர்ந்து வரும் 31-ம் தேதி (சனிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சேகர்நாப்தே தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.