திருப்பூரில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கல் குவாரிக்கு கொண்டு செல்வதைத் தட்டிக் கேட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கல் குவாரிக்கு கொண்டு செல்வதைத் தட்டிக் கேட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மடத்துக்குளம் அருகே உள்ள கருப்பசாமிபுதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து கல் குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலமாக இரவு பகலாக தண்ணீர் எடுத்து செல்ப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சனையில் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற விவசாயி தண்ணீர் எடுத்துச் சென்ற லாரியை மடக்கி தட்டிக்கேட்டார்.
அப்போது அந்த நிலத்தின் உரிமையாளர் செல்வபேபி என்பவர் லாரி டிரைவரின் உதவியுடன் தங்கவேலையும் அவரது மகன் சின்னதிரையையும் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் சின்னதுரையின் மண்டை உடைந்தது. மேலும், தங்கவேலு-வின் தாய்க்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.