காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச்சென்ற 282 பேரை இன்றைக்குள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்குள்ளவர்களை மீட்டு அரசு பொறுப்பில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். மேலும், இந்தக் கருணை இல்லத்துக்கான காப்பக உரிமம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது வரை உரிமம் இல்லாமல் இயங்கிவருவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து தமிழக அரசு அழைத்துச் சென்ற 282 பேரையும் இன்றைக்குள் அங்கு ஒப்படைக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களை தமிழக அரசு மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பில் பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில் 12 பேர் இறந்துவிட்டனர். அதில் 282 பேர் பல இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாக இயக்குநர் தாமஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்குள்ளவர்களை மீட்டு அரசு பொறுப்பில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். மேலும், இந்தக் கருணை இல்லத்துக்கான காப்பக உரிமம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது வரை உரிமம் இல்லாமல் இயங்கிவருவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து தமிழக அரசு அழைத்துச் சென்ற 282 பேரையும் இன்றைக்குள் அங்கு ஒப்படைக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களை தமிழக அரசு மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பில் பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில் 12 பேர் இறந்துவிட்டனர். அதில் 282 பேர் பல இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாக இயக்குநர் தாமஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.