கோவையில் பூச்சிகள் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

நாட்டின் மிகப்பெரிய பூச்சிகள் அருங்காட்சியகத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

கோவை: நாட்டின் மிகப்பெரிய பூச்சிகள் அருங்காட்சியகத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.



கடந்த 2014-ஆம் ஆண்டு கோவையில் பூச்சி அருங்காட்சியகம் அமைக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ. 5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. சுமார் 6,691 சதுரஅடி பரப்பளவில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சிகள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திறந்து வைத்தார்.



இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இந்த அருங்காட்சியகம் அமைய உறுதுணையாக இருந்த வேளாண் பல்கலை.,யின் விவசாய பூச்சிகள் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அருங்காட்சியகம் எதிர்கால பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிக்கு பெரும் வரமாக இருக்கும். இந்த அருங்காட்சியகத்தில் பார்வையிடும் விவசாயிகள், பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள முடியும்." என்றார். 



இந்த அருங்காட்சியகத்தில் 22,122 இனங்களைச் சேர்ந்த 84 ஆயிரம் பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், பூச்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் கண்ணாடிக் கூண்டில் பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு அருகே அதன் மேல்புறம் உள்ள எல்.இ.டி. திரையில், அந்தப் பூச்சிகளின் வகை, அவற்றின் நன்மை - தீமைகள், அவற்றை எந்தெந்த நாட்டில் பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டுகின்றன.



மேலும் பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலக அளவில் வெளிவந்திருக்கும் நூல்கள், தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பெரிய கரையான் புற்றுகள் போன்றவை எல்லாம் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிவாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது. 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...