கோவையில் 86 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர்

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 86 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமி சீர்வரிசை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.


கோவை: முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 86 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமி சீர்வரிசை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.130.46 கோடி மதிப்பில் பவானி கூட்டு குடிநீர் திட்டத்தையும் ரூ.215.51 கோடி மதிப்பிலான ஆத்துபாலம் முதல் உக்கடம் வரையிலான மேம்பால அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்ட பேரவை துனை சபாநாயகர் ஜெயராமன், மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமண நடைபெறும் இடத்திற்கு வந்த முதலமைச்சருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பளித்தனர். விழாவின் தொடக்கத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க 86 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆசீர்வதிக்க நடைபெற இந்த திருமணத்தில், புதிய தம்பதிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, குடம்,உள்ளிட்ட 70 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஐயாயிரதிற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...