கோடை விடுமுறையையொட்டி அனைவருக்கும் பொருந்தும் அரசு விடுமுறை அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

திருப்பூர் : கோடை விடுமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் அமையும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "வருகிற கோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். எனவே, மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. விடுமுறை அறிவிக்கப்படும் நாள் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...