தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, குற்றவாளிகளை விரைவில் பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி உத்தரவிடப்பட்டது. 

அதன்படி, ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் துணை ஆய்வாளர்கள் ஆனந்தராஜ், சுந்தரன், கணபதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டு எதிரிகளைப் பல இடங்களில் தேடி கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், குற்ற வழக்கில் தொடர்புடைய கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (25), ஊட்டி வெல்பெக் எஸ்டேட் அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா (33) ஆகிய 2 பேரை கண்டுபிடித்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் இருந்து சுமார் 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பிடிபட்ட இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தீவிர முயற்சி செய்து நேற்று இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவினை பெற்றார். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சார்வு செய்யப்பட்டது.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...