தமிழக அரசைக் கண்டித்து நீலகிரி, திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் நீலகிரி மாவட்டம் உதகையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.



நீலகிரி: பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் நீலகிரி மாவட்டம் உதகையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.



மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு கட்டப் போராட்டங்களையும் அவர்கள் தொடர்ந்து நடத்தினர். இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒருசில வாக்குறுதிகளை அளித்திருந்தது.



இந்த நிலையில், நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏ.டி.சி., சுதந்திர மைதானம் வரை கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.



இதனிடையே, தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து அடுத்த மாதம் 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஊட்டச்சத்து ஊழியர்கள் உள்ளிட்ட பல லட்சக்கணக்கான ஊழியர்களைத் திரட்டி சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல, திருப்பூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டும், 21 மாத கால நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் ஊதிய முரண்பாடுகளை தவிர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.



மேலும், தென்னாம்பாளையம் அரசுப் பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கோரிக்கைகளை முழங்கியவாறே பேரணியாகச் சென்றனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...