மூடியே கிடக்கும் கிராமப்புற இ-சேவை மையங்கள்: சான்றிதழ்கள் பெற அவதிக்குள்ளாகும் கிராமமக்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இ-சேவை மையங்கள் மூடியே கிடப்பதால், சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இ-சேவை மையங்கள் மூடியே கிடப்பதால், சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட 17 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், வருவாய் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், புதிய குடும்ப அட்டைப் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவுகள், நிலம் தொடர்பான சிட்டா, பட்டா அடங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த சான்றிதழ்களைப் பெற நகர் பகுதியில் உள்ள வருவாய் வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்களின் சிரமங்களை போக்க, பல கோடி ரூபாய் செலவில் இ-சேவை மையங்கள் அரசு சார்பில் கட்டப்பட்டன.

3 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையக் கட்டிடங்கள் எதுவும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால், எந்த அடிப்படை நோக்கத்தோடு இதுபோன்ற கிராமப்புற இ-சேவை துவக்கப்பட்டதோ, அதன் பயன்பாடு மக்களை சென்றடையவே இல்லை என பொதுமக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். வழக்கம் போல, அந்தந்த வருவாய் வட்டாச்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்கள் வேண்டி கிராமமக்கள் நாள் கணக்கில் அலைய வேண்டிய சூழலே நிலவி வருகிறது.

மேலும், ஆண்டு கணக்கில் மூடிக்கிடக்கும் இ-சேவை மையங்கள் பலவும் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், மதுக்கூடமாகவும் மாறி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பயன்படுத்தப்படாத பொருட்களை கொட்டி வைக்கும் குப்பைக்கிடங்காவும் இந்த புதிய கட்டிடங்களை, ஊராட்சி நிர்வாகங்களே மாற்றியுள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி கிராமப்புற இ-சேவை மையக் கட்டிடங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...