சுற்றுலா தலமான உதகையில் மற்றும் ஒரு மைல்கல் : கலைக்கூடமாக மாறிய கழிப்பிடம்...!

நீலகிரியில் பயன்பாடற்று கிடந்த கழிப்பிடக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, கலைக்கூடமாக மாற்றம் செய்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.


நீலகிரி : நீலகிரியில் பயன்பாடற்று கிடந்த கழிப்பிடக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, கலைக்கூடமாக மாற்றம் செய்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக நீலகிரி திகழ்ந்து வருகிறது. இங்கு, சுற்றுலா பயணிகள் கண்டு கழிக்க சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி தனியார் அமைப்பினரும் செயற்கையாக சுற்றுலா தளங்களை உருவாக்கி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடுகின்றனர்.

உதகையின் முகப்பு பகுதியான சேரிங்கிராஸ், உழவர் சந்தைக்கு செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கழிப்பிடம் இருந்தது. இக்கழிப்பிடத்திற்கு அருகில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பழைய கழிப்பிட கட்டிடம் உபயோகப்படுத்தாமல் நாளடைவில் பாழடைந்து போனது. இதைக்கண்ட தன்னார்வலர்கள் சிலர் இக்கட்டிடத்தை தங்களுக்கு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை அணுகினர். 



தாங்கள் இக்கட்டிடத்தைக் கலைக்கூடமாக மாற்றப்போவதாக கூறியதையடுத்து, இக்கட்டிடம் அவர்களுக்கு நகராட்சின் மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பில் சீர்செய்து கொடுக்கப்பட்டது. தற்போது, இக்கட்டிடம் ஓவியக் கலைக்கூடமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கலைக்கூடத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர் ஒருவரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவர் கண்ட மனிதர்களை ஓவியமாக வரைந்து காட்சிக்கு வைத்துள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலைக்கூடத்தை இன்று திறந்து வைத்தார்.

அடுத்த மாதம் கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில் இந்த ஓவிய கலைக்கூடம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...