கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது : தமிழிசை

கோவை மாவட்டம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் பலத்த சேதமடைந்தது. இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் எஸ்.ஆர். சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பா.ஜ.க., தொண்டர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதுவரை மாவட்ட தலைவர் வீட்டில் காரை எரித்த நபர்கள் யாரையும் கைது செய்யவில்லை. கடந்த 7-ம் தேதி மாவட்ட அலுவலகத்தில் தாக்கப்பட்டது குறித்து உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. முதல் தாக்குதல் நடத்திய போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இது தொடர்ந்து இருக்காது. போலீசார் மேலும் காலம் தாழ்த்தினால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேருமாறு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை," என்றார். 



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...