காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு

திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர்: திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



 

திருப்பூர் ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யகுமார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான 4 சென்ட் இடம் இருந்துள்ளது. இந்நிலையில், இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் வீட்டின் பத்திரத்தை கிரைய ஒப்பந்தம் செய்து ரூ. 7.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். சுமார் இரண்டு வருடகாலமாக வட்டி தொகை கட்டாத காரணத்தால், சூர்யகுமாரின் இடத்தை தெய்வசிகாமணி தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதையறிந்த சூர்யகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து வீரபாண்டி காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இதனால், மனமுடைந்த சூர்யகுமார், இன்று திருப்பூர் வீரபாண்டி காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதைக்கண்ட போலீசார் அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...