மேட்டுப்பாளையத்தில் பெய்த மழையால் நிரம்பிய வனக்குட்டைகள்

மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று பெய்த மழையால் வன உயிரினங்களுக்கு ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு தற்காலிகமாக நீங்கியது.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று பெய்த மழையால் வன உயிரினங்களுக்கு ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு தற்காலிகமாக நீங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தினமும் மாலை நேரங்களில் அதிகபட்சமாக இரண்டு மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. 

இதன் காரணமாக, இப்பகுதிகளில் கடந்த ஜனவரி மாதமே தொடங்கிய கடும் வெயிலின் தாக்கத்தால் காய்ந்து போன குளம் குட்டைகளில் ஓரளவு தண்ணீர் மீண்டும் தேங்க தொடங்கியது.

இவ்வாண்டு தொடக்கம் முதலே நிலவிய வறட்சியான சூழலால் கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை நீடித்து வந்தது. இதே போல காடுகளுக்குள் விலங்குகளின் தாகம் தீர்க்கும் நீராதாரங்களும் வறண்டதால் வன உயிரினங்களும் தவித்துப்போயின. 

தற்போது பெய்து வரும் மழை, இப்பிரச்சனையை ஓரளவேனும் தவிர்க்கும் விதமாக அமைந்துள்ளது. வனக்குட்டைகளில் நீர் நிரம்பி வருவதால் அவற்றைத் தேடி வரும் யானை, மான், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் அருந்தி தாகம் தீர்த்து வருகின்றன. மேலும், சாரல் மழை காரணமாக புற்கள் வளர்ந்துள்ளதால் தீவனமும் கிடைத்து வருகிறது. 

குட்டைகளிலும், தடுப்பணைகளிலும் நீர் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்களின் தேவை பூர்த்தியாகியுள்ளது. இது போன்று அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே எதிர் கொள்ளவுள்ள கோடை காலத்தின் வறட்சியை சமாளிக்க இயலும் என்கின்றனர் விவசாயிகள்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...