பத்மஶ்ரீ நானம்மாளுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்த கோவை ரோட்டரி சங்கத்தினர்

மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கோவை : மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.



அவினாசி ரோட்டில் அமைந்துள்ள சேம்பர்ஸ் டவர் வளாகத்தில், இன்று (வியாழக்கிழமை) மாலை விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் சாண்டியாகோ ஜேசு, செயலாளர் ஜ்யோதீஷ் பிள்ளை மற்றும் சிறப்பு வருந்தினர் K.S.பிள்ளை ஆகியோர் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' பத்மஶ்ரீ நானம்மாளிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தன் குடும்பனத்தினரோடு கலந்துகொண்ட நானம்மாள், யோக கலையின் நன்மைகள் குறித்து விளக்கினார்.

அவர் பேசுகையில், 'யோக கலை, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். அனைவரும் யோகாசனங்கள் செய்து, நோயில்லாத வாழ்வை பெற வேண்டும். கீரை, கம்பு, சிறுதானியம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 99 வயதிலும் தளராமல், நான் யோகா செய்வதற்கு, இயற்கை சார்ந்த உணவு பழக்கவழக்கம் தான் காரணம்' என்று கூறினார்.

அத்தோடு, உடலுக்கு வலிமை தரும் சில முக்கியமான யோகாசனங்களையும் மேடையில் செய்துகாட்டி அனைவரையும் அசத்தினார்.

இந்நிகழ்வில் பேசிய கோவை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சாண்டியாகோ ஜேசு, 'டில்லியில், குடியரசு தலைவர் கைகளால் பத்மஶ்ரீ விருது வாங்கிய பின், நானம்மாள் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். கோவைக்கு பெருமை தேடிதந்த அவரை, ரோட்டரி சங்கம் சார்பாக முதலாவதாக கெளரவித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்' என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...