சிறார்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை : கோவை போக்குவரத்து ஆணையர் பேட்டி

18 வயதுக்கு குறைவானவர்கள் மோட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களது பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை : 18 வயதுக்கு குறைவானவர்கள் மோட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களது பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித் குமார் தெரிவித்துள்ளார். 

மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு -3-இன் படி வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கக்கூடாது. அதைப்போல, பிரிவு 4-இன் படி 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்கள் வாகனத்தை இயக்கக்கூடாது. இந்த விதியை மீறினால் ரூ. 1,000 அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில், போக்குவரத்து விதிகளை மீறி ஓட்டுநர் உரிமம் இல்லாத 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்களை, வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அதிரடியான உத்தரவு சென்னையைத் தொடர்ந்து, கோவையிலும் தற்போது அமலுக்கு வந்துள்ளது. கோவை மாநகரில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதில், முக்கிய சாலைகளில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டும் சிறுவர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல கோரிக்கைகளும் எழுந்தன. ஏற்கனவே, வழக்கமாக போலீசார் நடத்தும் வாகன தணிக்கையில் வீட்டு வேலையாக செல்கிறேன். ஒருசிலர் வேலைக்கு சென்ற தங்களது பெற்றோரை அழைத்து வர நாள்தோறும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகிறேன் உள்ளிட்ட பல காரணங்களை தெரிவிக்கின்றனர். 

பின்னர், காவல்துறையினர் சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறுவதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது சட்டப்படி பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் கூறியதாவது :- தற்போது, கட்டாயமாக சென்னையைப் போல கோவையிலும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக்கூடாது. விதியை மீறி சிறுவர்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல, வாகன உரிமையாளர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிவிடுமுறை நாட்கள் வரும் நிலையில், சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...