ஜெயலலிதா சிகிச்சையின் போது சி.சி.டி.வி கேமராக்கள் நிறுத்தப்பட்டன : அப்பல்லோ

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சி.சி.டி.வி. நிறுத்தி வைக்கப்பட்டது. வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால் விரைவாக குணமடைந்து வந்தார். ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதாக நாங்கள் நினைத்தோம். உடல்நலம் தேறி வருவதற்கு, அத்தனை சிகிச்சைகளையும் அப்பல்லோ செய்தது. ஒருநாள் சிகிச்சை அல்ல. பல வாரங்கள் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. எதிர்பாராத சூழலில் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எல்லா தகவலையும், ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அப்பல்லோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...