30 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வு இல்லை: குமுறலில் வனத்துறை தோட்ட காவலர்கள்

தமிழக அரசின் சமூக வனத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் தோட்ட காவலர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: தமிழக அரசின் சமூக வனத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் தோட்ட காவலர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் வனத்துறையில், சமூக வன பாதுகாப்பு காடுகளை உருவாக தொடங்கப்பட்ட இந்த துறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் இதில் சுமார் 512 மிகை பணி தோட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.



தரிசாக உள்ள மலைக் குன்றுகள் மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் அவரவர் இடங்களில் நாற்றுகளை வைத்து சமூக காடுகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். இந்த துறை தொடங்கப்பட்டது முதல், இதுவரை தோட்ட காவலர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய நாற்றங்கால் பண்ணையில் வனம் சார்ந்த மர நாற்றுகளை வைத்து அதனை பாதுகாத்து, வனப்பகுதிகளிலும் பள்ளி கல்லூரி வளாகங்களில் நட இவர்கள் மேற்கொள்ளப்படும் பணி கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எங்கள் வாழ்வில் இன்னும் பசுமை திரும்பவில்லை என்று குற்றம்சாட்டும் தோட்ட காவலர்கள், பணி உயர்வுக்கான தமிழக அரசு ஆனை 46 வெளியிடப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் 200 பேருக்கு மட்டும் பணி உயர்வினை பெயரளவில் வழங்கிவிட்டு மீதமுள்ள 300 பேரை புறக்கணித்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தோட்ட காவலர்கள், சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் மாத வருமானம் ரூ.7 ஆயிரத்தைக் கூட தாண்டுவதில்லை. இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பமே வறுமையுள்ளது.

இந்த சூழலில், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வை தமிழக அரசு விரைந்து வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...