இளம்பெண்ணைத் தாக்கி நகை பறித்த வாலிபர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் இளம்பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்த வாலிபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் இளம்பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்த வாலிபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 



உதகை வண்டிச்சோலை பகுதியில் வசிப்பவர் பிரவினா. இவர் இன்று காலை வண்டிச்சோலை சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு மர்ம நபர் சாலையோரம் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில் பிரவினா நிலை குலைந்து கீழே விழுந்தார். 

பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அந்த நபர் பறித்து கொண்டு ஓடியுள்ளார். அப்போது பிரவினாவின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய அந்த நபரைப் பிடித்து உதகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தொடர்ந்து அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டதில், குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் வசிக்கும் அபுதாஹீர் (33) ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர், அபுதாஹீருக்கு மேலும் பல கொள்ளை வழக்குகளில் சம்பந்தம் உள்ளதா? என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...