திருப்பூரில் வெடிஉப்பு விற்பனை கடையில் பயங்கர தீவிபத்து

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெடிஉப்பு விற்கப்படும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெடிஉப்பு விற்கப்படும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



 

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில். இக்கோயிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தும் உப்பு பொட்டிலங்களை விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 70 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த கடையில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. முதலில், பயங்கர வெடி சத்தத்துடன் பற்றத் துவங்கிய தீ, பின்னர் கொளுந்துவிட்டு எரிந்து கடை முழுவதையும் தீக்கிறையாக்கியது. பின்னர், அருகிலிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடைக்குள் பொட்டாசியம் நைட்ரைடு மற்றும் பெரியம் நைட்ரைடு ஆகியவை இருந்ததால் தீகொளுந்து விட்டு எரிந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தின் மூலம் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மாநகரின் மிக முக்கியப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த தீ விபத்து, அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...