மாவட்ட தலைவர் காருக்கு தீ வைப்பு: கோவையில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்

பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் வீட்டில் நிறுத்தப்பட்ட காரில் தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஹோப் காலேஜ் சிக்னலில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் வீட்டில் நிறுத்தப்பட்ட காரில் தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஹோப் காலேஜ் சிக்னலில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் சி.ஆர்.நந்தகுமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது தொடர்பாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களின் உதவியுடன் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காருக்கு தீ வைத்துச் சென்ற மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி ஹோப் காலேஜ் சிக்னலில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் சுமார் அரை மணி நேரம் நடத்திய இந்த சாலை மறியல் காரணமாக அவினாசி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.



மறியல் தொடர்பான தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...